Friday, May 28, 2010

மலரும் நினைவுகள




ஊருக்குள் தினமும் தான் நடக்கின்றன
திருமணங்கள் !

ஊர் பார்த்து உறவு கூடி
பெண் பார்த்து முகம் பாராமல்
நிச்சயித்து பின் மனம் கலந்து
பேசி அமைந்ததால் -
சில திருமணங்கள்!

ஊர் சுற்றி உறவு தெரியாமல்
கதைகள் பேசி மனம் கலந்து
உயிராய் உயிரென காதலித்து
சிறிதாய் பெரிதாய் கஷ்டப்பட்டு
பேசி அமைதததால் -
சில திருமணங்கள்

எப்போதும் இருக்கின்றனர்
ராஜகுமாரனுக்காக கனவுகளில் காத்து இருக்கும்
முதிர் கண்ணிகள் !

தினமும் ஒருவராவது பார்க்க முடியும் -
அந்த அழகு தேவதைக்காக காத்து இருக்கும்
நாளைய மாப்பிள்ளைகள் !


நாட்கள் கடந்து,
வருடங்கள் ஓடி,
சுற்றம் நட்பு என ஒன்றாய் கூடுகையில்
ஓவருவருக்கும் பேச இருக்கிறது
பல வசந்த கால கதைகள்:-)
அனைவருக்கும் பொதுவாய் இருக்கிறது
அவரவர் கடந்து வந்த
மலரும் நினைவுகள் :-)))


Note:
(தேடி அலைந்து, அழுது மறைந்த காதல்கள் எல்லாம்
இந்த கதைகளில் பேசுவதில்லை -----------------
அதனால், அவற்ற்றை இங்கே எழுதவில்லை :-))

No comments:

Post a Comment