Friday, May 28, 2010

உனக்காக

என்றைக்கும் போல பர பர குளியல் சமையல்

முகம் பார்த்து பேசும் முன் ஓடிவிட்ட காலை பொழுது

கடிகார மணி பார்த்து அவசர அவசர ஆபீஸ் வேலைகள்

இத்தனைக்கும் நடுவே நடுவே எட்டி பார்க்கும்

உன் நினைவு !

இன்றைக்காவது அனுப்ப , தேடினேன் அழகு கவிதைகள்

புகைப்படம் , வாழ்த்து அட்டை, பரிசு பொருள்

ஒன்றும் அகப்படவில்லை உன்னை சிரிக்க வைக்க!

இன்னும் கொஞ்சம் தேடுவதற்குள்

அவசரமாய் அடுத்த மீட்டிங்

இப்போதைக்கு நான் அனுப்புவது என் குட்டி புன்னகை மட்டுமே ,

உன் நினைவுகளால் !

மலரும் நினைவுகள




ஊருக்குள் தினமும் தான் நடக்கின்றன
திருமணங்கள் !

ஊர் பார்த்து உறவு கூடி
பெண் பார்த்து முகம் பாராமல்
நிச்சயித்து பின் மனம் கலந்து
பேசி அமைந்ததால் -
சில திருமணங்கள்!

ஊர் சுற்றி உறவு தெரியாமல்
கதைகள் பேசி மனம் கலந்து
உயிராய் உயிரென காதலித்து
சிறிதாய் பெரிதாய் கஷ்டப்பட்டு
பேசி அமைதததால் -
சில திருமணங்கள்

எப்போதும் இருக்கின்றனர்
ராஜகுமாரனுக்காக கனவுகளில் காத்து இருக்கும்
முதிர் கண்ணிகள் !

தினமும் ஒருவராவது பார்க்க முடியும் -
அந்த அழகு தேவதைக்காக காத்து இருக்கும்
நாளைய மாப்பிள்ளைகள் !


நாட்கள் கடந்து,
வருடங்கள் ஓடி,
சுற்றம் நட்பு என ஒன்றாய் கூடுகையில்
ஓவருவருக்கும் பேச இருக்கிறது
பல வசந்த கால கதைகள்:-)
அனைவருக்கும் பொதுவாய் இருக்கிறது
அவரவர் கடந்து வந்த
மலரும் நினைவுகள் :-)))


Note:
(தேடி அலைந்து, அழுது மறைந்த காதல்கள் எல்லாம்
இந்த கதைகளில் பேசுவதில்லை -----------------
அதனால், அவற்ற்றை இங்கே எழுதவில்லை :-))